KALAKAD LINKS

Kalakad Group
Sivan Temple
very first kalakad site

KALAKADIANS

Airomatic Systems
Kulirnthakatru
santhamma
Educational Service

EXTERNAL LINKS

Mazhalaigal.com
Thamizhisai.com
Young Poet.org
Healthcareall.org
Brahmin Today.org
Azhagi.com

The beautiful Kalakad       எழில் கொஞ்சும் களக்காடு

அன்பர்களே

வாருங்கள்

Google
 
Namaskaram
ஆலயம் தொழுவது சாலவும் நன்று

Tamil literature quotes Kalakad

களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை

[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு
வெண்பா

பூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்
வாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்
பொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை
என்கருத்த ரென்கருத்த ரே.

நூல்

அணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்
பிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா
மருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்
திருமாலை யேசத் தினம்.

[1]

தினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்
மனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்
இனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்
கனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே.

[2]

கண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்
கண்ணுதலைக் காணாத காட்சிபோற்-கண்ணுதலை
எட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால்
எட்டியிருந் தேனாகு மே.

[3]

ஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்
பாகத்தி லேயொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்
தேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே
ஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே.

[4]

என்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்
பொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்
இடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்
இடத்தாளை யஞ்சாதே யின்று.

[5]

இன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்
கோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்
அன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்
என்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே.

[6]

யான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்
தான்புணை காண்சத்ய வாசகன்மீ-கான்காண்
அடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்
கொடிப்படங் கம்பமே கூம்பு.

[7]

கூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே
னாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்
வேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்
பாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே.

[8]

பரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற
பிரம்படிபோ லுன்னடியான் பெற்றேன்-நிரம்பும்
குதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான
மதுரைகளக் காடாகு மற்று.

[9]

மற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்
உற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்
சொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்
கற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே.

[10]

களந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்
களந்தை வருமரனைக் காணான்-வளர்ந்தவொரு
மாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு
மாலைக்கண் டானென்னும் வந்து.

[11]

உம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த
அம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்
நம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா
வம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே.

[12]

வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
ஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே
அன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை
தென்புன்னைக் காட்டனடி சேர்.

[13]

சேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்
ஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா
டாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்
கூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே.

[14]

கொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்
கொண்டாடு வேன்களந்தைக் கொற்றவா-புண்டாவக்
கைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை
நச்சிலை யாலடியே னை.

[15]

அடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ
குடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்
கடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்
வடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே.

[16]

வைத்த பொருளு மனையாளு மைந்தருமே
கைத்த பொருளென்று கைவிட்டுப்-பத்திபண்ணும்
ஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே
சோரா ரணியர் துணை.

[17]

துணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்
கணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்
அணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்
பணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே.

[18]

பன்னுமறை யோனேபரமன் முடிதேட
உன்னு மதியா லுனைத்தாங்கும்-அன்னமாய்ச்
சேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்
கோணங் களந்தையோ கூறு.

[19]

கூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்
சாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே
மாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மேன்மருந்தாய்
ஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே.

[20]